Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகிளிநொச்சியில் புதையல் தோண்டிய நால்வர் கைது

கிளிநொச்சியில் புதையல் தோண்டிய நால்வர் கைது

கிளிநொச்சி மின்சார சபை சுற்றுலா விடுதி பகுதியில் புதையல் தோண்டிய
நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று (11) மதியம் 12:45 மணியளவில் குறித்த பகுதியில்
புதையல் தோண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கிளிநொச்சி அறிவியல் நகர் விசேட அதிரடிப்படையினருக்கு
கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட
சுற்றிவளைப்பில், குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்கள் அநுராதபுரம் மின்சார சபையில் பணியாற்றுபவர்கள்
என கூறப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments