Thursday, May 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமகள் மூட்டிய தீயில் உயிரிழந்த தாய்

மகள் மூட்டிய தீயில் உயிரிழந்த தாய்

யாழில் மகள் மூட்டிய தீயில் வயோதிபதாயொருவர் உயிரிழந்த சம்பவம்
நேற்று (29) இடம்பெற்றுள்ளது.

அரியாலையை சேர்ந்த பரமசிவம் பரமேஸ்வரி (வயது 81) என்பவரே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 17 ஆம் திகதி இவரது மகள்
வீட்டுக்கு அருகே குப்பைக்கு தீ வைத்துள்ளார். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு
வெளியே கடைக்கு சென்றுள்ளார். இதன்போது தாயார் வீட்டு அறையில்
உறங்கிக்கொண்டு இருந்தார்.

இதன்போது ஜன்னல் வழியாக தீயானது உள்ளே சென்று கொடியில் இருந்த
ஆடைகளில் பற்றிஇ வீட்டு கூரை மரங்களிலும் பற்றியது. இதன்போது குறித்த
வயோதிப பெண் படுக்கையில் இருந்த நிலையில் அவர்மீதும் தீ பற்றியது.

அவர் அவலக்குரல் எழுப்பிய நிலையில் அருகில் உள்ள வீட்டில் வசித்த
மற்றைய மகள் ஓடிவந்து அவரை காப்பாற்றி யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி
இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை
அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments