Thursday, April 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்த சிறுவனின் வயது உறுதியாகியது

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்த சிறுவனின் வயது உறுதியாகியது

யாழ்ப்பாணம்,  அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டிற்கு
இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது.

பொலிசாரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தி சென்றார்கள் என
நேற்று முன்தினம் (10) அதிகாலை பொலிஸார் குறித்த வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வட்டுக்கோட்டையை சேர்ந்த
அருள்பயஸ் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான்.

அது தொடர்பில் 10ஆம் திகதி பொலிஸார் வெளியிட்ட ஊடக அறிவித்தலில்
17 வயது என குறிப்பிட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் 11ஆம் திகதி
வெளியிட்ட மற்றுமொரு ஊடக அறிவித்தலில் 19 வயது என
குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்நிலையில் உயிரிழந்த சிறுவன் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09ஆம்
திகதியே பிறந்தார் என வீட்டார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 09ஆம் திகதிக்கு பின்னரே 18 வயதாக
உள்ளது. தற்போது சிறுவனுக்கு 17 வயதும் 3 மாதங்களுமே ஆகின்றன என
உறுதியாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments