யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டிற்கு
இலக்காகி உயிரிழந்த சிறுவனின் சடலத்துடன், குறித்த சம்பவத்துடன்
தொடர்புடைய பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சிறுவனின்
உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்று (12) வட்டுக்கோட்டை –
சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.
அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள்
வீதியில் இருந்து ‘பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும்,
பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது’ என கோஷமிட்டவாறு போராட்டத்தில்
ஈடுபட்டனர்.

