Wednesday, April 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஜனாதிபதி- சர்வதேச நாணய நிதிய உயர் அதிகாரி சந்திப்பு

ஜனாதிபதி- சர்வதேச நாணய நிதிய உயர் அதிகாரி சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவாவுக்கும் ,  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும்
இடையில் இன்று (17) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்புக்கு பின்னர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தமது எக்ஸ் கணக்கில்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை வெகுதூரம் கடந்து வந்துள்ளது. அரசாங்கத்தின் சீர்திருத்த
வேலைத்திட்டம் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நற்பலன்களை அளித்து
வருகிறது.

அனைவருக்கும் சுபீட்சத்தை வழங்கும் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில்,  சீர்திருத்தங்களைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை தாம் வலியுறுத்தியதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments