Friday, April 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசுன்னாகத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

சுன்னாகத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

இன்று (24) யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில்,  மாடியில் இருந்து தவறி விழுந்த
ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் – ஊரெழு பகுதியை சேர்ந்த வையித்திலிங்கம் ஜெயச்சந்திரன் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் நேற்று (23) இரவு மாடியில் இருந்து இறங்கியுள்ளார். இதன்போது கால்
தவறி கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே
உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை
அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments