மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக்கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு விசேட
உரையொன்றை ஆற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
தனது உரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்தவொரு போர் மோதலும் எந்தவொரு மக்கள் குழுவிற்கும் சாதகமான
நிலையை உருவாக்காது.
தொழில்நுட்ப ரீதியாகவும், போர் ரீதியாகவும் பாரிய ஆயுதத் தொழில்நுட்பக்
கருவிகள் உருவாக்கப்பட்டு வரும் உலகில் இது எவ்வளவு அழிவுகரமானது
என்பது குறித்து நாம் அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.
எனவே, இலங்கையின் நிலைப்பாடு என்னவென்றால், இந்தப் போருடன்
தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத்
தேவையான அர்ப்பணிப்புகளையும் வழிகாட்டல்களையும் மிக விரைவில்
வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

