யாழ்ப்பாணம், சரவணை பகுதியில் உள்ள ஆலயத்தில் சிலையை உடைத்து
சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
சரவணை, செல்லக்கதிர்காமம் ஆலயத்தில் உள்ள உருவச்சிலையே
நேற்று (09) சேதப்படுத்தப்பட்டது.
கண்காணிப்பு கமரா காட்சிகளின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில்
விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார் அப்பகுதியைச்
சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.

