தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு லெபனானின் சிடோன் நகரிலுள்ள அல் – புவார் எனும் இடத்திலுள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றை குறி வைத்து இன்று (13) இஸ்ரேல் நடத்திய
வான் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதோடு, 9 பேர் காயமடைந்துள்ளதாக
அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத் தாக்குதலால் குறித்த குடியிருப்பு கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளதோடு, மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

