முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கள்ளியடி பகுதியில்
உள்ள பேராற்றில் நண்பர்களுடன் நீராடிய இளைஞன் ஒருவர்நேற்றுமுன்தினம் மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 20 வயது இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

