Sunday, May 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை பரிதாபமாக பலி

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை பரிதாபமாக பலி

யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று
நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அனனிகா
என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

23.03.2026 அன்று தாயொருவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
அதில் ஒரு பெண் குழந்தைக்கு நேற்றையதினம் தாயார் பால் கரைத்து
ஊட்டியுள்ளார்.அபின்னர் குறித்த குழந்தை சிறிது நேரத்தில் விறைத்துப்போய்
காணப்பட்டது.

இந்நிலையில் குழந்தையை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு
கொண்டு சென்றவேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக
வைத்தியர்கள் தெரிவித்தனர்.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை
அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments