Saturday, June 13, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசொல்லிசை பாடகர் சங்கீத்சன் பிணையில் விடுதலை

சொல்லிசை பாடகர் சங்கீத்சன் பிணையில் விடுதலை

தடுத்து வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது.

சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில்,  பாடலை பாடி,  அந்த பாடலுக்கு தனது இசை சேர்க்கையில் உருவான சொல்லிசை பாடலை இணைத்து சமூக ஊடகங்களில் கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞன் சங்கீத்சன் பகிர்ந்திருந்தார்.

அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடந்த 2ஆம் திகதி
இளைஞனை கைது செய்து விசாரணைகளின் பின்,  மறுநாள் 03ஆம் திகதி
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து ,  இளைஞனை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில்
விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில்,  இளைஞனை விடுதலை செய்யுமாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் இ உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல்
வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதேவேளை நேற்றைய தினம்
வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை கோரி மனு தாக்கல்
செய்யப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments