நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு
இன்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆலய தலைவருமான
வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நிறைவடைந்தது.
கும்பாபிஷேக நிகழ்வில் வாழும் கலை அமைப்பின் நிறுவனரும் சமாதான தூதுவருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி, கோயம்புத்தூர் சுவாமி ஜகதாத்மானந்தா சரஸ்வதி, பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார் வடிவேல் சுரேஸ், சீ.பி.ரட்ணாயக்க, மருதபாண்டி ராமேஸ்வரன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, பிரதி தூதுவர் டாக்டர் எஸ்.ஆதிரா உட்பட இந்தியா நேபாளம் ஜப்பான் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்தவர்களும் பெருந்திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

