Saturday, August 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமணல் மாஃபியாக்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

மணல் மாஃபியாக்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

வடக்கில் உள்ள மணல் மாஃபியாக்களின் பின்னால் சில அரசியல்வாதிகள்,  சில பொலிஸார் உள்ளனர் என்பது எமக்கு தெரியும். இவர்கள் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு விளையாட்டு காட்டியது போல தேசிய மக்கள் சக்தி
அரசாங்கத்திற்கும் காட்டலாம் என நினைக்க வேண்டாம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக்
கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில்
நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக்
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே
அவ்வாறு தெரிவித்தார்.

மணல் கொள்ளையர்களிடம் இருந்து எமது வளங்களை பாதுகாக்க வேண்டும்.
அண்மைய நாட்களில் மணல் கொள்ளையர்களினால் 06 உயிர்கள் காவு
வாங்கப்பட்டுள்ளது. ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தரின் உயிரை கூட
காவு வாங்கியுள்ளனர்.

இது ஆட்டை கடிச்சு ,  மாட்டை கடிச்ச கதையாக பொலிஸ் உத்தியோகஸ்தரின்
உயிரை பறிக்கும் அளவுக்கு சென்றுள்ளனர். இவர்களுக்கு எதிராக கடுமையான
நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்தி அனுமதிபத்திரங்கள் வழங்குவதன்
ஊடாக ஒரு கியூப் மண் 7500 ரூபாய்க்கு வழங்க முடியும். அதனால் ஒரு டிப்பர்
மண் 23 ஆயிரத்திற்கு பெற முடியும். யாழ்ப்பாணத்திற்கு அதனை கொண்டு
வருவதற்கான போக்குவரத்து செலவுகள் உள்ளிட்ட செலவுகளை கணித்தால் ,
சுமார் 55 ஆயிரம் தொடக்கம் 65 ஆயிரத்திற்கும் மண்ணை விநியோகிக்க
முடியும்.

சட்டவிரோதமாக மணலை விற்பனை செய்யும் மணல் மாஃபியாக்கள் ஒரு டிப்பர்
மண்ணை ஒரு இலட்சத்து 20ஆயிரம் ரூபாய் வரைக்கும் யாழ்ப்பாணத்தில்
விற்பனை செய்கின்றனர்.

சட்டவிரோத மணலுடன் முதல் தடவை கைப்பற்றப்படும் வாகனத்திற்கு
50 ஆயிரம் ரூபாய் வரையில் தண்டம் அறவிடப்படும். இரண்டாவது தடவையும்
அதே தவறை செய்தால் 20 இலட்ச ரூபாய் வரையில் தண்டம் அறவிடப்படும்.
மூன்றாவது தடவையும் அதே தவறை செய்தால் வாகனம்
அரசுடைமையாக்கப்படும். இது தொடர்பான சட்டங்கள் மிக கடுமையாக
நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பில் நீதி அமைச்சு உள்ளிட்ட
தரப்புகளுடன் பேச்சுக்கள் நடாத்தியுள்ளோம்.

அத்துடன் பொலிசாரின் நடவடிக்கைகள் சாதாரண மக்களை வஞ்சிக்கும்
நடவடிக்கையாக இருக்காது ,  மாஃபியாக்கள் மீதான கடுமையான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என பொலிஸாருக்கும் அறிவுறுத்தியுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments