தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளதுடன் அக வணக்கம் செலுத்தப்பட்டு, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அதன் பின்னர், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த
நினைவேந்தல் நிகழ்வில் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்,
ஊழியர்கள், முன்னாள் போராளிகள், தமிழ் தேசிய உணர்வார்கள் மற்றும்
பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

