இன்று மௌனத்திற்கும் தண்டனையின்மைக்கும் ஒரு முடிவுகட்ட வேண்டும்
என்ற நமது அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறோம் என பிரித்தானிய
நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்படுவதாவது,
மே 18, முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நாம் நினைவுகூர்கிறோம்.
அத்துடன், நீதிக்கான நமது போராட்டம், பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகளைப்
போற்றுகிறது.
எம்முடைய மௌனத்திற்கும் தண்டனையின்மைக்கும் ஒரு முடிவுகட்ட வேண்டும் என்ற நமது அழைப்பை இன்று நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

