தன்னைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு எதிராக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அதன் மீதான மேலதிக
விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி வரை ஒத்திவைக்க
உத்தரவிட்டுள்ளது.
தன்னைத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவை வலுவிழக்கச்
செய்யுமாறு கோரியே சுரேஷ் சலே இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளராக பணியாற்றிய சுரேஷ் சலே தொடர்பான இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளன.

