Tuesday, July 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்

சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு
வழங்கிய தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் பொலிஸார்
பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை
மேற்கொண்டனர். அப்போது,  1997 ஆம் ஆண்டு பிறந்த இளைஞர் ஒருவரின்
சடலத்தை மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்காக
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளில்,  அவர் சுமார் மூன்று நாட்களுக்கு முன்னரே
உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் மானிப்பாய் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் உறவினர்கள் வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும்,  அவர் சங்கானையில் தனியாகவே வசித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments