லிட்ரோ எரிவாயு நிறுவனம் கடுவெல மாபிம பகுதியில் புதிய எரிவாயு
நிரப்பு முனையம் ஒன்றை நாளை திறந்து வைக்கப்படவுள்ளதாக அதன்
தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
‘புதிய நிரப்பு முனையம் நாளை திறக்கப்படும். கெரவலப்பிட்டி முனையம்
போதாது. நாளொன்றுக்கு 60, 000 சிலிண்டர்கள் வெளியிடப்படுகின்றன.
டிசம்பரில் இருந்து வாரத்தில் 2 நாட்கள். பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில்
கெரவலப்பிட்டி மற்றும் மாபிம இரண்டும் செயற்பாட்டில் இருந்தன.
கெரவலப்பிட்டியை நிறுத்த வேண்டி ஏற்பட்டால், மாபிமவில் இருந்து
தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்க முடியும்.’ என்றார்.

