விருதுநகர் தொகுதியில் களமிறங்கிய மறைந்த கெப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
இந்தியாவின் 18ஆவது பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
தமிழக நிலைவரப்படி தி.மு.க. 38 தொகுதிகளிலும் அ.தி.மு.க. 1 தொகுதியிலும் பா.ஜ.க. 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை.வைகோ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் களமிறங்கிய மறைந்த கெப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

