பெரம்பூரில் தமிழ்நாடு நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில்இ நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்துக் கொண்டு உரையாற்றியிருந்தார்.
அதன்போதுஇ தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். குறித்த நிதழ்வில் உரையாற்றிய அவர்இ தம்பி நான் குட்டி கதை சொல்பவன் அல்ல, வரலாற்றை கற்பிக்க வந்தவன்.
திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கன் என விஜய் சொன்னவுடன் நான் மிகவும் பயந்துவிட்டேன். திராவிடம் வேறு, தமிழ் தேசியம் வேறு. தமிழ் தேசிய அரசியல் பேரரசன் மணியரசன் கூறுவார். ஒன்று சாம்பார் என்று சொல். இல்லை கருவாட்டுக் குழம்பு என்று சொல். இரண்டும் சேர்த்து கருவாட்டு சாம்பார் என்று சொல்லாதே.
நீங்கள் இனிமேல்தான் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும். நாங்கள் அதைப் படித்து பி.எச்டி வாங்கிவிட்டோம். 75வது ஆண்டு கொண்டாடிய கட்சிக்கே திராவிடம் என்றால் என்னவென்று தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

