Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஏனைய கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமைக்குமா? – டில்வின்

ஏனைய கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமைக்குமா? – டில்வின்

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு ஊழல் இல்லாத தேசிய சீர்திருத்த திட்டத்தைத் தொடர ஒரு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

‘தனி ஒரு கட்சியாக NPP தெளிவான மற்றும் முன்னணி வெற்றியைப் பெற்றுள்ளது.
இது சிறப்பு வாய்ந்தது’ என்றும் அவர் கூறினார்.

அதிகாரங்களை நிறுவுவதற்கு சுயாதீன குழுக்களுடன் இணைந்து செயல்பட
NPP தயாராக உள்ளது.

ஆனால் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி
அமைக்காது என்று அவர் கூறினார்.

‘முன்னணி கட்சியாக,  எங்களுக்கு ஆட்சி செய்ய உரிமை உண்டுஇ’ என்றும் அவர்
மேலும் கூறினார்.

2025 உள்ளூராட்சித் தேர்தலில் கட்சி பெற்ற வெற்றிகளைக் குறிப்பிட்டு, பொதுமக்கள் NPP மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில்இ இலங்கை
பொதுஜன பெரமுன வாக்குகளில் ஆதிக்கம் செலுத்தியதை விட
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் NPP அதிக வாக்குகளைப்
பெற்றது என்று அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments