Thursday, April 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின்
முதலாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகிறது.

இதன்படி,  அரச மற்றும் அரச அணுசரனையின் கீழ் இயங்கும் தனியார்
பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை
விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதேநேரம் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக
எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும்
என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டப் பாடசாலை நடவடிக்கைகளை
ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண
தரப் பரீட்சைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளன.

பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சைகள்
நடைபெறவுள்ளன.

நாடளாவிய ரீதியில் 3, 545 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சையை நடத்த
பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புக்கள்இ கருத்தரங்குகள் மற்றும்
செயலமர்வுகளை நடத்துவதற்கு கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல்
தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments