Monday, April 20, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்

பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக
இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டன போராட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நூலகத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த போராட்டம் ஏ-9 வீதியூடாக பேரணியாக சென்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்து அங்கு நிறைவுற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி ‘புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்,  வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்,  காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு நீதி வேண்டும்,  என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தவத்திரு வேலன் சுவாமிகள்,  மத குருக்கள்,  சமூக மட்ட
சிவில் அமைப்புக்கள்,  அரசியல் பிரமுகர்கள்,  காணாமல் ஆக்கப்பட்டோரது
உறவுகள்,  இளைஞர்கள் மற்றும் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments