Tuesday, May 19, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாஇறந்தவர்களின் நீதிக்காக உயிருடன் இருப்பவர்கள் குரல் எழுப்புவோம்- உமா குமாரன் எம்.பி

இறந்தவர்களின் நீதிக்காக உயிருடன் இருப்பவர்கள் குரல் எழுப்புவோம்- உமா குமாரன் எம்.பி

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் உண்மை,  நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படுவதை முன்னிறுத்தி எனது குரலையும்,
அதிகாரத்தையும் பயன்படுத்துவேன் என உமா குமாரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாதாவது,

இன்று,  மே 18 ஆம் நாள்,  முள்ளிவாய்க்கால்,  தமிழ் இனப்படுகொலை
நினைவு நாள்

17 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும்,  இலங்கையில் நடந்த இராணுவத் தாக்குதலின் இறுதிக்கட்டங்களில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நினைவை நாம் கௌரவிக்கிறோம் – இது இதுவரை நீதி கிடைக்கப் பெறாத ஒரு பேரழிவுகரமான கொடூரமாகும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் வலியும் வேதனையும் இன்னும் தொடர்கிறது. அது உலகளாவிய புலம்பெயர் தமிழர்களின் நினைவிலும் ஆழமாகப் பதிந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்லும்போதுஇ நமது துன்பங்களையும் இழப்புகளையும் புதிய நினைவூட்டல்கள் நமக்கு உணர்த்துகின்றன. சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள செம்மணி-சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில்
தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி,  தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களின் ஒரு கொடூரமான நினைவூட்டலாகும்.

ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்லும்போதுஇ பொறுப்புக்கூறலுக்கான நமது குரல்கள் முன்பை விட வலிமையாகவும் உரத்ததாகவும் மாறுகின்றன. நீடித்த அமைதியையும் சமரசத்தையும் வளர்ப்பதற்கு உண்மையும் நீதியும் இன்றியமையாதவை ஆகும். இருப்பினும்இ மௌனமும் தண்டிப்பிலிருந்து விலக்கு பெரும் போக்கும் ஆழமாக வேரூன்றியுள்ளனஇ,  நீதிக்கான வாய்ப்பு இன்னும் தொலைதூரமாகிவிட நாம் அனுமதிக்கக் கூடாது.

நாம் நினைவு கூர்ந்து துக்கம் அனுசரிக்கும் வேளையில்,  உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோருவதற்கான நமது அர்ப்பணிப்பை மீண்டும் புதுப்பிக்கிறோம். இதுபோன்ற கொடூரங்கள் இனி எப்போதும் மீண்டும் நிகழாத ஒரு அமைதியான எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும்.

இன்றும் எப்போதும்,  நாம் கடந்த காலத்தை கௌரவிப்பதோடு,  உயிர் பிழைத்தவர்களின் கதைகள்மௌனமாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்.

எனக்கு இருக்கும் பொறுப்பை நான் ஆழமாக உணர்கிறேன்,  மேலும் உண்மை மற்றும் நீதிக்காகக் குரல் கொடுக்க எனது குரலையும் எனது பதவியின் அதிகாரத்தையும் தொடர்ந்து பயன்படுத்துவேன்.

ஒன்றாக இணைந்து,  உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள நமது தமிழ் சமூகம் நீதிக்கான ஒரு கூட்டு அழைப்பைக் கொண்டுள்ளது. அது ஒருபோதும் மௌனமாக்கப்படாது. இறந்தவர்களால் நீதிக்காகக் கதற முடியாது அதைச் செய்வது வாழ்பவர்களின் கடமையாகும்.’ என்றுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments