Thursday, May 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளர் நியமனம்

யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளர் நியமனம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளருக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு,  நேற்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் ஆளுநரின் தலைமையில் நடைபெற்றது.

ஆளுநரிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் புதிய ஆணையாளர் டி.சி.அரவிந்தராஜ் உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார்.

இந்த நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில்,  வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments