Friday, May 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபோதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு யாழ்.மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு யாழ்.மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் கெரோயின் போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி A.Gஅலெக்ஸ்ராஜா  தீர்ப்பளித்தார்.

வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகி இருந்த அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ,  அதிகரித்து வரும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் உயர் நீதிமன்ற வழக்குகளை மேற்கோள்காட்டி,  போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டனை வழங்க வேண்டும் என சமர்ப்பனங்களை மேற்கொண்டிருந்த நிலையில்’ இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments