தலவத்துகொட சந்தியில் உள்ள ஒரு உணவகத்தில் இன்று (09) காலை ஏற்பட்ட
தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் காயமடைந்த நான்கு பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில்
சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

