லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் பணிபுரிந்து
கொண்டிருந்த தொழிலாளர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு உள்ளாகியதில்
ஒருவர் உயிரிழந்தார்.
இன்று காலை 10.00 மணிளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 61 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் லிந்துலை
பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும்இ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏனையவர்களில் பலத்த
காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

