யாழ். பிராந்தியத்திற்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களின் அரை ஆண்டுக்கான
நிர்வாக மற்றும் செயற்பாட்டுப் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று யாழ்ப்பாணம் பிரதான பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றன.
யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K.A.E.N.ஜெயமஹ அவர்களின் தலைமையில் குறித்த பரிசோதனை நிகழ்வு
முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மு.யு.நு.N. தில்றுக் மற்றும்
யாழ்ப்பாண பிரதான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி R.M.P. பாலித்த செனவிரத்ன ஆகியோரின் ஏற்பாட்டில் இப் பரிசோதனைகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.
இப்பரிசோதனை நடவடிக்கையின் போது, பொலிஸார் தமது பொதுச்சேவைகளையும் பாதுகாப்புப் பணிகளையும் முன்னெடுப்பதற்காகப் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ வாகனங்களின் தரம் மற்றும் பராமரிப்பு நிலைமைகள் என்பன விசேடமாக அவதானிக்கப்பட்டு, துல்லியமாகப் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

