Tuesday, September 15, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகாணிகளை விடுவிக்க கோரி பலாலி சந்தியில் போராட்டம்

காணிகளை விடுவிக்க கோரி பலாலி சந்தியில் போராட்டம்

வலி.வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி பலாலி சந்தியில்
இன்றைய தினம் 13ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள
தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை
முன்னெடுத்துள்ளனர்.

தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும்
நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள்,  வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில்
தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை
முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்,,  கடந்த வெள்ளிக்கிழமை காணி விடுவிப்பு தொடர்பில்
பாராளுமன்றில் உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றுள்ள நிலையில்,
பலாலி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை இந்த மாதத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments