Tuesday, April 21, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்திடீரென நிறுத்தப்பட்ட எரிவாயு கப்பல் போக்குவரத்து

திடீரென நிறுத்தப்பட்ட எரிவாயு கப்பல் போக்குவரத்து

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும்
ஈரானின் பழிவாங்கல் ஆகியவை மத்திய கிழக்கில் எண்ணெய் போக்குவரத்தை
சீர்குலைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நடைபெறும் கூட்டத்தில்,  சவுதி அரேபியா,  ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,
கஜகஸ்தான், குவைத், ஈராக்,  அல்ஜீரியா மற்றும் ஓமன் ஆகிய எட்டு நாடுகள்
கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மட்டத்தில் பெரும் போர் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில்இ
இந்த சூழ்நிலையை தணிக்க’OPEC+  அமைப்பு இன்று (01) அவசர அவசரமாக
எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக
தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, உற்பத்தியை 137, 000 பீப்பாய்கள் அதிகரிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும்
இ தற்போதைய அவசரநிலை காரணமாக அதை ஒரு நாளைக்கு 411,000 பீப்பாய்கள் அல்லது அதற்கு மேல் அதிகரிப்பது குறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில்
விவாதிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

உலகின் 20% க்கும் அதிகமான எண்ணெய் போக்குவரத்தை கடந்து செல்லும்
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை நிறுத்துவதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, நேற்று (28) முதல் எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய விநியோக பற்றாக்குறையை ஈடுகட்ட சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஏற்கனவே தங்கள் உற்பத்தி திறனை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும்,  சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தவிர மற்ற நாடுகளில் உற்பத்தியை அதிகரிக்க அதிகப்படியான திறன் இல்லாதது சந்தையை பாதிக்கும் முக்கிய சவாலாக உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments