Sunday, August 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- தமிழரசின் முக்கியஸ்தர்கள் இன்று சந்திப்பு

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- தமிழரசின் முக்கியஸ்தர்கள் இன்று சந்திப்பு

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கிராவிக்குக்கும்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு
இன்று கொழும்பில் நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன்இ நாடாளுமன்ற
உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை,  வடக்கு – கிழக்கு பகுதிகளின்
நிலவரம்இ மக்களின் வாழ்வாதார சவால்கள்,  ஜனநாயக செயல்முறைகள் மற்றும்
நீடித்த அரசியல் தீர்வின் அவசியம் போன்ற விடயங்கள் தொடர்பில்
கலந்துரையாடப்பட்டன.

போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் நீடித்து வரும் அரசின் பொறுப்புணர்வு
தொடர்பான கேள்விகள்,  நீதியை நிலைநிறுத்தும் செயல்முறைகள்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வது மற்றும்
உண்மையான நல்லிணக்கம் உருவாக வேண்டிய சூழல் குறித்து விரிவாக
கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

அத்துடன்,  அரசியல் அதிகாரப் பகிர்வு, அரசமைப்பு சீர்திருத்தங்களின் அவசியம்
மற்றும் தமிழர் மக்களின் நீண்டநாள் அரசியல் உரிமைகளை மதிக்கும்
வகையில் அர்த்தமுள்ள மற்றும் நிலையான தீர்வை உருவாக்குவதின்
முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது

நோர்வே நாட்டுடன் தொடர்ச்சியான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி,  ஜனநாயக மதிப்புகள்இ,  மனித உரிமைகள்,  மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துவதில் எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவது குறித்தும் பேசப்பட்டது என்று இரா. சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments