Saturday, August 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமே 25 வரை அதிகரித்த வெப்பம்-வளிமண்டலவியல் திணைக்களம்

மே 25 வரை அதிகரித்த வெப்பம்-வளிமண்டலவியல் திணைக்களம்

பல மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை
எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என
வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன் காரணமாக,  கடும் வெயிலுக்கு மத்தியில் விளையாட்டு நடவடிக்கைகளில்
ஈடுபட வேண்டாம் என பாடசாலை விளையாட்டு வீரர்களுக்கு வைத்தியர்கள்
அறிவுறுத்தியுள்ளனர்.

நாட்டில் நிலவும் இடைப் பருவக்காற்று காலநிலை காரணமாக,  கடந்த
நாட்களுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பல பகுதிகளில் தற்போது கடும்
வெப்பமான வானிலை நிலவுகிறது.

இதன் விளைவாக மேல்,  சப்ரகமுவ,  தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,
மொனராகலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தை
எட்டியுள்ளது.

வெப்பச் சுட்டெண்ணின்படி,  இந்த மதிப்பானது 45 இற்கும் அதிகமானது என்பதோடு,  இது ‘அதிக அவதானம்’ செலுத்த வேண்டிய மட்டமாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments