வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா நாளை (08) காலை மிக சிறப்பாக இடம்பெறவுள்ள நிலையில், தேர்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து
நடைபெற்று வரும் நிலையில், நாளை காலை 06.15 மணிக்கு வசந்தமண்டப
பூஜை ஆரம்பமாகி, தொடர்ந்து ஆறுமுக சுவாமி தேரில் ஆரோகணித்து
பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பார்.
தேர் திருவிழாவின் போது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர்
தேசங்களிலும் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் ஆறுமுக சுவாமியின்
அருட்காட்சியினை கண்டுகளிக்க ஒன்று கூடுவார்கள்.

