அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இன்று புரூனேக்கு விஜயம் செய்துள்ளார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி புரூனே சென்றுள்ளார். புருனே செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு சுல்தான் ஹசனல் போல்க்கை சந்திக்கவுள்ளர். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவு, வர்த்தகம், விண்வெளிதுறை, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை
நடத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புரூனே பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

